அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி ஏற்பாட்டில் 1067 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது முதல்வர் பதவியை இழந்தார். ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவினரின் பூஜைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.